திருக்கழுக்குன்றம்.

இடி அபிஷேகம்.

பால் அபிஷேகம்.பஞ்சாமிர்த அபிஷேகம். பன்னீர் அபிஷேகம்.தேன் அபிஷேகம் என பலவித அபிஷேகங்களை இறைவனுக்கு செய்வதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இடி அபிஷேகம் பற்றி கேள்வி பட்டிருக்கீர்களா? ஒவ்வொரு வருடமும் இறைவனுக்கு இடி அபிஷேகம் இங்குள்ள வேதகிரீஸ்வரருக்கு நடைபெறுகின்றது. .
திருக்கழுக்குன்றத்தில் தேவலோக இந்திரன் பூஜை செய்தான். 
தொடரந்து பூஜித்தும் வருகின்றான். அதற்கு ஆதாரமாக இங்கு
 மலைமீது அமைந்துள்ள கருவறை கோபுரத்தின் கலசத்தின்
 அருகில் சிறிய துவாரம் இருப்பதை இன்றும் காணலாம்.
அந்த துவாரத்தின வழியாக இடிவிழுந்து சிவலிங்கத்தை 
சுற்றி பரவி பாய்ந்து விடுகின்றது. கடும் மழையுடன் இடி
 விழுந்தாலும் ஊருக்கு பாதிப்பு ஏதும் இல்லை.தொடர்ந்து
 இந்த மலையில் அமைந்துள்ள ஆலயத்தில் இடி விழுந்து 
வருகின்றது என்பதை


”அடிபட்டீர் கலலாலும் எறிப்பட்டீர்,
அத்தனைக்கும் ஆனாயந்தப்
படிபபட்டும் போதாமல் உதைப்பட்டீர்
இப்படியும் படுவாருண்டோ?
முடிபட்ட சடையுடையீர் கழுக்குன்றீர்
முதற்கோணல் முட்டக்கோணல்
இடிபட்டும் பொறுத்திருந்தீர் சிவ
சிவா உமைத் தெய்வமென்னலாமே”


என்று வரும் சொக்கநாதர் பாடலாலும்,


உதைவயன்ன கல்லெறி யென்னவில்
உடனே பிரம்படி யென்ன மற்(று)
இது வன்றியும் சிவனே யுனக்(கு)
இடியும் தலைப்பொறியோ வையா”


என வரும் கழுகாச சதகச் செய்யுளும் வலியுருத்துகின்றது.  




நேற்று இரவு (25-10-2010 )கடும் மழை - பயங்கர மின்னல் - 
அதிரவைக்கும் இடி சத்தம். இந்திரனின் இடி பூஜை
 இனிதே முடிந்தது.


அனைவரும் இறைவனை வணங்கினோம்.


ஓம் நமச்சிவாய....


வாழ்க வளமுடன்.
வேலன்.



பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்