வேலன்:-திருக்கழுக்குன்றத்தின் தீர்த்தங்கள்.

புகழ்பெற்ற திருக்கழுக்குன்றத்தில் மொத்தம் 16 புண்ணிய தீர்த்தங்கள் இருந்திருக்கின்றது. அவைகள் எங்கு எங்கு எந்த நிலையில் உள்ளது என பார்க்கலாம்.


1.சங்கு தீர்த்தம்.

உலகப்புகழ் பெற்ற சங்குதீர்த்த குளம் சுமார் 13 ஏக்கர் பரப்பளவு கொண்டது. வழக்கமாக கடல்  நீரில் பிறப்பதாக சொல்லப்படும் சங்கு இங்கு நன்னீரில் பிறப்பது சிறப்பு. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இங் கு சங்கு பிறக்கும். அதனாலேயே இதனை சங்கு தீர்த்தம் என அழைக்கின்றனர்.கடந்த 01.09.2011  அன்று இத்திருக்குளத்தில் சங்கு பிறந்தது.ஒரு மண்டலம் -48 நாட்கள் குளித்து மலைவலம் வந்தால் சித்தபிரமை தீரும் என்பது உண்மை.நோய் தீர்க்கும் தீர்த்தம் என்பது சிறப்பாகும். கங்கா நதி.காவிரி நதி.சரஸ்வதி நதி.வைதாளி நதி.கோமகி நதி.பொன்முகி நதி.தெனகுமரி நதி.தேவிகை நதி.கம்பை நதி போன்ற அனைத்து நதிகளிடமும் சிவபெருமான கூறியதாவது:-
"காணினும் கைதொடினும் அள்ளித்தெளிப்பினும் உட்கொளினும்;-கணப்பொழுது முழ்கினும்-கால் வழுக்கி வீழினும் பாணிவிரி திரையின் ஒரு பனித்திவலை படினும் படரும் காற்றனுகினும் மெய்ப்பாதகம் குடிபோம் சேலைகு தொழுமிந்த தடந்தோறும் நீர் முகந்து செலும் அடியோர் அயமேகத்திற நகராம. விரதம் பூனுமவர் படிந்தியற்றில் அனந்தமெனப்பலிக்கும் புராரி என்றும் தீர்த்தம் என்றும் இரண்டில்லை இப்புரிக்கே" என கூறியுள்ளார்.
குரு பகவான் கன்னிராசிக்கு பிரவேசிக்கும் காலம் புஷ்கர மேளா நடைபெறும். அதுசமயம் இந்த குளத்தில்  நீராடுதல் சிறப்பாகும். அன்று மாலை நடைபெறும் லட்ச தீப பெருவிழா காண கண்கோடி வேண்டும். சமீபத்தில் 02.08.2016 அன்று இவ்விழா நடைபெற்றது.


2. ருத்ர தீர்த்தம்:-

இங்கு சங்கு தீர்த்த குளத்திற்கு தெற்கு பகுதியில் ருத்ராங்கோயில் அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள சிவனை தேவகணங்கள்.முனிவர்கள்.வழிபட்ட திருக்கோயில் இது.ஏழு மங்கையரும்.முருகக்கடவுளும்.வசிஷ்டர் விசுவாமித்திரர் அகத்தியர் ஜனக முனிவர் அகலிகை முதலியோர் தவம் செய்து அவரவர் வேண்டுதல் நிறைவேற்றியதாக ஐதிகம். ருத்ரர்கள் இறைவனை வேண்டி இத்தலத்திற்கு ருத்ர தீர்த்தம் எனவும்.இத்தலம் ருத்ராங்கோயில் எனவும். இங்குள்ள சிவன் ருத்ர கோடீஸ்வரர் எனவும் வழங்க வேண்டி அதன்படியே இத்தலம் வழங்கப்படுகின்றது.




3.வசிஷ்ட தீர்த்தம்:-

இது ருத்திரான்கோயிலில் உள்ள  ஓசூரம்மன் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது. இங்கு வசிஷ்டர் பல வேள்விகள் செய்து சிவனருள் பெற்றதால் இதற்கு வசிஷ்ட தீர்த்தம் என பெயர் உண்டாயிற்று. இங்குள்ள அம்மனை வெள்ளிக்கிழமம் விரதம் இருந்து வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும். இக்குளத்தில் மூழ்கி சிவனை வசிஷ்டர் வேண்டியதாக வரலாறு உண்டு. அம்மன் அருளாளல் குழந்தை பாக்கியம் இல்லாவர்களுக்கு குழந்தை பெற்றதாக சொல்வதுண்டு.


4. அகத்திய தீர்த்தம்:-

இந்த குளம் கருங்குழி போகும் வழியில் வெள்ளாழ தெரு முனையில் அமைந்துள்ளது.இங்கு அகத்தியர் தவம் செய்ததால் இது அகஸ்தியர் தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது.சுந்தர மூர்த்தி நாயனார் கழுக்குன்ற ஈசனை பூஜிக்க வந்தபோது இக்குளத்தில நீராடி எழுந்த போது சிவ காட்சி பெற்று பொன்பெற்றார் அத்தகைய சிறப்பு வாய்ந்தது இந்த தீர்த்தம்.அதன் காரணமாக இன்றும் சித்திரை திருவிழா நடைபெறும் நான்காம் நாள் திருவிழா உற்சவத்தில் இறைவன் தெற்கு வாசல் வழியாக வந்து தீர்த்தத்தின் அருகில் மண்டபத்தில் வைத்து சுந்தரருக்கு பொற்றாளம் அளிக்கும் போது அன்புடன் இறைவன் இடம் உபதேசம் பெறுகிறார்.




5. மார்க்கண்டேய தீர்த்தம்:-

அகத்திய தீர்த்தத்திற்கு வடக்கு. தாழக்கோயிலுக்கு தென்மேற்கிலும் வயல்வெளிக்கு நடுவில் அமைந்துள்ளது. அருகிலேயே ஆலமரமும் அம்மன்கோயிலும் உள்ளது. மார்க்கண்டேய முனிவர் இறைவனை வணங்கி அருள்பெற்ற இடம் .எனவே இது மார்க்கண்டேய தீர்த்தம் என அழைக்கப்படுகின்றது.



6.ஞான தீர்த்தம்:-


இந்த தீர்த்தம் மார்க்கண்டேய தீர்த்தத்திற்கு வடக்கு புறத்தில் அமைந்துள்ளது. ஆனால் அங்கு சென்று பார்த்தால் குளத்தினை காணவில்லை..குளத்தின் அருகே மண்டபமும் வினாயகர் கோயிலும்.ஆலமரமும் உள்ளதாக சொன்னார்கள். தேடிக்கொண்டிருக்கின்றோம்.

7.கௌசிக தீர்த்தம்:-

இது மலைக்கு வட மேற்கில் அமைந்துள்ளது.கொளசிக முனிவர் இதில நீராடி சிவனை வழிபட்டதால் இவர் பெயரே இக்குளத்திற்கு அமைந்துள்ளது. பேச்சு வழக்கில் ஆண்டரசன் குளம் -ஆண்டர்சன்குளம் என்றும் அழைக்கப்படுகின்றது. இது வன்னிய தெரு முடிவில் உள்ளது.




8.அகலிகை தீர்த்தம்:-

அகலிகை வேதமலை ஈசனை வணங்கிடவும் அவள் பாவ விமோசனம் பெற்று நலம் அடைந்திடவும் தேவர்களும் முனிவர்களும் தொழுதிடும் கழுக்குன்ற ஈசனிடம் வந்தபோது இந்த குளத்தில் நீராடி சிவனை வழிபட்டதால் இது அகலிகை தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது. தற்காலத்தில இது வெள்ளை குளம் என்று அழைக்கப்படுகின்றது.



9.வருண தீர்த்தம்:-

மலை வலம் வரும் சமயம் நவகிரக கோயிலுக்கு பின்புறம் இந்த தீர்த்தம் உள்ளது. வருண பகவான் இக்குளத்தில் நீராடி பின்னர் இறைவனை வழிபட்டதால் வருண தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது. இதன் அருகிலேயே கோடி வினாயர் ஆலயம் உள்ளதால் கோடிவினாயர் தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகின்றது.




10. சுந்தர  தீர்ததம்:-

நால்வர்கோயில் பேட்டை -தேவஸ்தானத்திற்கு சொந்தமான பயணிகள் விடுதி அருகில் உள்ளது. சுந்தரர்  இங்குள்ள குளத்தில் நீராடி இறைவனை வேண்டியதால் இது சுந்தர தீர்த்தம்  என்று அழைக்கப்படுகின்றது.




11.இந்திர தீர்ததம்:-

இது நால்வர் கோயில் பேட்டையில் நால்வர் கோயில அருகில் உள்ளது. அப்பர் சுவாமிகள் இக்குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டதாக பதிகம் உள்ளது. இறைவனடிகளார்கள் இறைவனை வழிபட இக்குளத்தில் ;தினம் நீராடி இறைவனடி சேர்ந்ததால் இது இந்திர தீர்த்தம் என அழைக்கப்படுகின்றது.


12. சம்பு தீர்த்தம்:-

இந்த தீரத்தம் மாமல்லபுரம் சாலையில் கொத்திமங்கலத்தில் அமைந்துள்ளது. இதன் கரையில ஆலமரமும்.முனிஸ்வரர் ஆலயம் உள்ளது. சம்பாதி மற்றும் சடாயு போன்ற பல முனிவர்கள் இக்குளத்தில் மூழ்கி சிவனை வழிபட்டு முக்தி அடைந்தார்கள். அதனாலேயே இது சம்பு தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது.




13. லட்சுமி தீர்த்தம்:-

ஒரு முறை சிவனை காண திருமால் கயிலாயம் சென்றபோது வேதமலை(திருக்கழுக்குன்றம்) வந்து என் திருக்காட்சியை காண்பாயாக என அழைத்தார் அதன்படியே திருமால் இங்கு வந்து லட்சுமி சமேதராக இக்குளத்தில நீராடி இறைவனை வழிபட்டார்.அப்போது திருமாலிடம் லட்சுமி தேவி இக்குளத்திற்கு என்ன பெயர் என வினவினார். சகல சம்பத்துக்களும் தரும் நீயே இங்கு நீராடியதால் இது லட்சுமி தீர்த்தம் என வழக்கட்டும் என்றும் இக்குளத்தில் நீராடி இறைவனை வழிபடுபவர்கள் வாழ்வில லட்சுமி கடாச்சம் கிட்டும் என வரம் வழங்கினார். அதன்படியே இக்குளம் லட்சுமி தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது.





14.நந்தி தீர்த்தம்:-

இறைவனை நந்தி இந்த குளத்தில் நீராடி வழிபட்டு இறையடி சேர்ந்ததால் இது நந்தி தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது. இது தாழகோயில் உள்புறம்அமைந்துள்ளது. 



15.பட்சி தீர்த்தம்:-

வேதமலை மீது பட்சி உணவருந்தும் பாறைக்கு அருகில் இந்த தீர்த்தம் உள்ளது. இரண்டு பாறைகளுக்கு இடையே இந்த தீர்த்தம் உள்ளது. கடுமையான  வறட்சியிலும் இக்குளத்தில் உள்ள நீர்வற்றியது இல்லை. கடும் பிணிஉள்ள நாய் குளத்தில் விழுந்து பிணி நீங்கி சென்றதாக வரலாறு உண்டு. பட்சிகள் நீராடுவதால் இது பட்சி தீர்த்தம் என அழைக்கப்படுகின்றது.

திருக்கழுக்குன்றத்தில் மொத்தம் 16 தீர்த்தங்கள் உள்ளதாக சொல்கின்றார்கள். மதுளம் குப்பத்தில் ஒரு குளம் உள்ளதாக சொல்கின்றார்கள். அதுபற்றிய விவரம்தெரியவில்லை. அதுபோல மலை மேலே நரிக்குளம் உள்ளது. அது தீர்த்தங்கள் வரிசையில் வருமா என தெரியவில்லை..காணமல் சென்ற குளங்களை தேடிக்கொண்டிருக்கின்றோம்....பேருராட்சியிலோ - திருக்கோயில் அலுவலகத்திலோ - தாலுக்கா அலுவலகத்திலோ இதற்கான விவரங்கள் கிடைக்கும் என எண்ணுகின்றேன். தகவல்கிடைத்தால் அதனையும் பதிவிடுகின்றேன். 

திருக்கழுக்குன்றத்தில் உள்ள தீர்த்தங்கள் காண்கையில் மூன்று தீர்ததங்களை தவிர மற்ற தீர்த்தங்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. குளங்களை புதியதாக வெட்ட வேண்டாம். இருக்கின்ற..
குளங்களையாவது பராமரிக்கலாம் அல்லவா...
ஆண்டவனும் ஆள்பவர்களும் மனதுவைத்தால்தான் உண்டு...
நமது ஊர்..நமது குளம்...நமது பெருமை..அதனை காப்பது நமது கடமை...

வாழ்க வளமுடன்
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-அன்னதானம் வழங்க அனுமதி வேண்டும்.

திருக்கழுக்குன்றத்தில் நடைபெற உள்ள இலட்சதீப மற்றும் புஷ்கரமேளாவிற்கு அன்னதானம் வழங்க உள்ளவர்கள் அதற்கான முறையான அனுமதிபெற்றே அன்னதானம் வழங்கவேண்டும்.
வேண்டுதலுக்காகவும். பிரார்தனை நிறைவேற்றுதலுக்காகவும்.இன்னபிற காரணங்களுக்காகவும் பக்தர்கள் அன்னதானம் வழங்குகின்றனர். பல லட்சம் மக்கள் கூடும் இடங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்கவும். மக்களுக்கு உடல் பாதிப்பு வருவதை தடுக்கும் வகையிலும் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சில வரையறையை வகுத்துள்ளார்கள். அதன்படி 
1.அன்னதானம் வழங்கும் நபர்கள் அவர்களுடைய பாஸ்பேர் புகைப்படம்-1 மற்றும் ரேஷன் கார்ட் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை நகல் மற்றும் அன்னதானம் வழங்குவதற்கான அனுமதி விண்ணப்பம் சமர்பிக்கவேண்டும். மேலும் சார்நிலை கருவூலத்தில் ரூபாய் 100- ஐ செலுத்தி அதற்கான ரசீதையும் இணைக்கவேண்டும். இவ்வாறு வாங்கப்படும் அனுமதி ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்.திருக்க்குகழுன்றத்தில் நடைபெறும் எந்த விஷேஷங்களுக்கும் அன்னதானம் வழங்க - ஒரு வருடத்திற்கு இந்த அனுமதிக்கடிதம் போதுமானது
2..இதேப்போல காஞ்சிபுரம் மாவட்டதில் நடைபெறுகின்ற அனைத்து கோயில்களுக்கும் நீங்கள் அன்னதானம் வழங்க விரும்பினால்இதே வரைமுறையை பயன்படுத்தலாம் ஆனால் கருவூலத்தில் ரூபாய் 100க் கு பதில் ரூபாய் 2000 செலுத்தவேண்டும்.
3. அன்னதானம் வழங்குவதற்கு முன்னர் நீங்கள் வழங்கும் அன்னதானத்திலிருந்து ஒரு பாக்கெட் உணவினை தனியே எடுத்துவைத்துவிடவேண்டும். 
4. உணவினை தயாரித்து ஆறுமணிநேரத்திற்குள் அதனை வினியோகம் செய்துவிடவேண்டும்.
5. சூடாக உணவினை பாக்கெட் செய்திடல் கூடாது.
6. உணவு வழங்கும் இடத்தில் தண்ணீர்வசதியும் குப்பைகளை போடுவதற்கு குப்பைகூடை வசதியையும் செய்திட வேண்டும்.
6. அதிகமான மக்கள் கூடுவதால் நீங்கள் அன்னதானம் வழங்கும் இடத்தினை முன்னரே அலுவலர்களிடம்தெரிவித்துவிடவேண்டும்.
7. அன்னதானம் வழங்குவதற்கு ஒவ்வொரு உணவிற்கும் தனிதனிகரண்டி பயன்படுத்தவேண்டும்.
8.உணவு வழங்குபவர் கைகளில் கைஉறை அணிய வேண்டும்.
9. அன்னதானம் செய்வதற்கு தரமான பொருட்களையே பயன்படுத்துங்கள். தரமில்லா பொருளில் தயாரித்து 100 பேருக்கு வழங்குவதை விடதரமாக தயாரித்து 50 பேருக்கு வழங்குவதே புண்ணியமாகும்.
உங்களுக்கு இதில் ஏதேனும் சந்தேகம் மற்றும் விளக்கங்கள் தேவைப்பட்டால் கீழ்கண்ட எண்ணில்தொடர்பு கொள்ளவும். 
செல்பேசி எண்:-9965626599

நமது ஊர் ..நமது பெருமை..அதனை காப்பது நமது கடமை...
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வாட்டர் பாக்கெட் வாங்க - விற்க -பயன்படுத்த தடை.

திருக்கழுக்குன்றத்தில் நடைபெற உள்ள இலட்ச தீப திருவிழாவினை முன்னிட்டு வருகின்ற 25.07.2016 முதல் வாட்டர் பாக்கட்டுக்கள். மொத்தமாகவும்.சில்லறையாகவும் விற்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.



திருக்கழுக்குன்றததில் நடைபெற உள்ள புஷ்கரமேளா மற்றும் இலட்சதீப திருவிழாவிற்காக சுமார் 7 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்கக்ப்படுகின்றது. அவர்களின் தேவைக்கு ஏற்ப சுத்தமான குடிநீரும் .சுத்திகரிக்கப்பட்ட பாட்டில் குடிநீரும் வழங்கப்பட உள்ளது. வாட்டர் பாக்கெட் பயன்படுத்துவதால் ஒருவருக்கு இரண்டு பாக்கெட் வீதம் சுமார் 15 இலட்சம் வாட்டர் பாக்கெட் டின் பிளாஸ்டிக் குப்பை நகரத்தில் சேரும். அது மண்ணில் புதைந்து மீத்தேன் வாயு உருவாவதற்கும். மழை நீர் நிலத்தில் சேராமலும் தடுத்துவிடும். அதன் காரணமாக வாட்டர் பாக்கெட் இருப்பு வைப்பதற்கும். விற்பதற்கும். பயன்படுத்துவதற்கும் தடைவிதிக்கப்படுகின்றது. மீறி யாராவது வாட்டர் பாக்கெட் விற்பதாக நீங்கள் அறிந்தால் சுகாதார ஆய்வாளர் அவர்களிடன் கீழ்கண்ட எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.செல்பேசி எண்:-
9965626599 
நமது ஊர் நமது பெருமை..அதனை காப்பது நமது கடமை..
வாழ்க வளமுடன்
வேலன். 

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:- 5 முக்கிய நிகழ்சிகள் ஒரே நாளில்.

திருக்கழுக்குன்றத்தில் வருகின்ற 02.08.2016 நடைபெற உள்ள திருவிழா 5 சுப நிகழ்ச்சிகளை கொண்டுவருகின்றது.



1. புஷ்கர மேளா:-

குரு ஒவ்வொரு வருடமும் ஒரு ராசி என்று 12 ராசிகளையும் சுற்றி வருகின்றார்.அதன்படி குரு பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு 02.08.2016 அன்று காலை 09.27 க்கு மாறுகின்றார்..  புண்ணிய நதிகள் நமது சங்கு தீர்த்த குளத்தில் அன்று சங்கமிப்பதாக ஐதீகம். அன்று குளத்தில் குளித்தால் பல புண்ணியநதிகளில் குளித்த பலன் நமக்கு கிடைக்கும். குறிப்பாக கன்னி ராசி காரர்களுக்கு அதிகபலன் கிடைக்கும்.

2. இலட்ச தீபம்:-

 திருக்கழுக்குன்றத்தில் உள்ள மலைக்கோயில்.தாழக்கோயில.ருத்ராங்கோயில்.தீர்த்தகிரிஸ்வரர் கோயில் உள்ள அனைத்தது கோயில்களிலும்.சங்கு தீர்த்த குளத்தின் படிகளிலும் லட்ச தீபம் ஏற்றப்படும்.

3. அம்மன் தேர் உற்சவம்:-

தாழக்கோயிலில் உள்ள திருபுரசுந்தரி அம்மனுக்கு 10 நாள் ஆடி உற்சவம் நடைபெறும். அதன் படி 02.08.2016 அன்று அதிகாலையில்
அ ம்மன் தேர் மாடவீதிகளில் உலா வர இருக்கின்றது.

4. ஆடி அமாவாசை:-

காலம் சென்ற முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைய ஆடி அம்மாவாசை அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் அதிக பலன்கள் கிடைக்கும். ஆடி அமாவாசையும் 02.08.2016 அன்று வருகின்றது.

5. ஆடி செவ்வாய் கிழமை 3 ம் வாரம்:-

செவ்வாய் .வெள்ளி.மற்றும் ஞாயிறுக்கிழமை 3 ஆம் வாரத்தில் அம்மனை வழிபடுவது விஷேஷம். அதன்படி வருகின்ற 02.08.2016 அன்று 3 வது வாரம் செவ்வாய் கிழமை வருகின்றது.

அனைவரும் வருக ..இறைவன் அருள் பெறுக.

வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-இலட்சதீப திருவிழா-திருக்கழுக்குன்றம்.

திருககழுக்குன்றத்தில் ;இதுவரையில் நடை பெற்ற  லட்ச தீப திருவிழா வின் கடந்த கால நினைவுகள்:-

1968 ம் வருடம்:-

சங்கு தீர்த்த குளத்தினை சுற்ற நிறைய தென்னைமரங்கள் இருந்தன. ஒவ்வொரு தென்னை மரத்திலும் இரண்டு இரண்டு டியூப் லைட்டுகள் கட்டியிருந்தார்கள். குளத்தினை சுறறி மாட்டுவண்டிகளில் மக்கள் வந்திருந்தார்கள்.

1980 ம் வருடம்:-

சங'கு தீர்தத குளத்தினை சுற்றியும் முக்கியமான  தெருக்களிலும் கொம்பினை நட்டு அதில் கம்பியை கட்டி அதில் விளக்குகளை தொங்க விட்டார்கள்.திரி மற்றும் எண்ணை .எண்ணை ஊற்றுவதற்கு டப்பா என ஏற்பாடுகள்  செய்திருந்தார்கள்.

1992 ம் வருடம்:-

நகர் முழுவதும் மின் அலங்காரம் செய்திருந்தார்கள்.குவியல் குவியலாக அகல்விளக்கினையும் பெரல்களில் எண்ணையையும் வைத்திருந்தார்கள். 

2004 ம் வருடம்:-
குரு பெயர்ச்சி இரவில் நடைபெற்றது. அதன்காரணமாக புஷ்கர மேளா இரவிலும் லட்சதீபம் ஏற்றும் நிகழ்ச்சி மறுநாளும் நடைபெற்றது. இரவில் சுவாமி அலங்காரம் மிகச்சிறப்பாக இருந்தது. விளக்குகளை குளத்தின் படிக்கட்டுக்களிலும். கோயிலிலும் மலைகளிலும் ஏற்றியிருந்தார்கள்.

2004 நடைபெற்ற லட்சதீப திருவிழாவின் நான்காம் பகுதி கீழே:-
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-இலட்ச தீப திருவிழா -திருக்கழுக்குன்றம்.


திருக்கழுக்குன்றத்தில் நடைபெற உள்ள லட்ச தீப திருவிழாவிற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.துறை வாரியாக கருத்துக்கள் கேட்கப்பட்டு அதற்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.போர்கால அடிப்படையில் பணிகள் நடைபெறும் என எதிர்பார்கக்ப்படுகின்றது.


திருவிழா முன்னிட்டு திருக்கழுக்குன்றம் பள்ளிகளுக்குஜீலை 30,31 மற்றும் ஆகஸ்ட் 1.2.3 தேதிகளில் உள்ளூர் விடுமுறையும் ஆகஸ்ட் 2 ம்தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அரசு விடுமுறையும் அறிவித்தால் நன்றாக இருக்கும்.இதனால் அனைத்து ஊரிலுள்ள மக்களும் திருவிழாவிற்கு வந்து செல்வார்கள். அரசு ஆவண செய்யும் என எதிர்பார்க்கினறோம்.

வாழ்க வளமுடன்
வேலன்.
திருக்கழுக்குன்றம்.




கடந்த முறை நடைபெற்ற லட்சதீப திருவிழாவின் மூன்றாம் பாகம் வீடியொ தொகுப்பு கீழே...


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-லட்சதீப திருவிழா -திருக்கழுக்குன்றம்.


இலட்ச தீபத்திற்கு முன்னர் உடனடியாக முடிக்க வேண்டிய பணிகள்:-

1. மலைவலப் பாதையில் திருவடி பூங்கா முதல் இராஜலிங்கேஸ்வரர் கோயில் வரை உள்ள கிரிவல பாதையில் சிறு கற்களை அகற்றி தார் ரோடு போடவேண்டும். 
2. கிரி வல பாதையில் திருவடி பூங்கா மற்றும் நால்வர்கோயில் பேட்டை பள்ளி அருகில் கழிப்பிட வசதி செய்து தரவேண்டும்.
3. கிரி வல பாதையில் உள்ள நந்தி மண்டபங்களை சுற்றி வருமாறு வசதி செய்து தரவேண்டும்.
4. கிரி வல பாதையில் தெருவிளக்கும்.குடிநீர் வசதியும் நிரந்தரமாக ஏற்படுத்தி தரவேண்டும்.
5.இந்த முறை லட்சதீபத்திற்கு ஐந்து லட்சதிற்கும்  மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கேற்ப பாதுகாப்பு மற்றும் குடிநீர் வசதி மறறும் கழிப்பிட வசதி செய்து தரவேண்டும்.
6.கும்பகோணத்தில் மகாமகத்தில் செய்தவாறு தீர்த்தவாரியில் குளிக்கும் நிகழ்ச்சியை ஒருநாளில் இல்லாமல் ஒருவாரத்திற்கு குளத்தில் நீராடலாம் என்றும் ;அதற்கான வசதியை செய்துதரலாம். இதனால் ஒரே நாளில் ஏற்பாடும் கூட்டநெரிசலை தவிர்க்கலாம்.
7.சங்கு தீர்த்த குளத்திற்கு அருகில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில் திறந்தவெளியில் இல்லாமல் தீர்த்தவாரி மண்டபம் கட்டவேண்டும். இதனால் தீர்த்தவாரிக்கு வரும் சுவாமிசிலைகள் மழையிலும் வெய்யிலிலும் இருக்கவேண்டிய நிலைவராது.
8.சங்கு தீர்த்த குளத்தில் உள்ள காரிய மண்டபத்தில்- குளத்தில் குளிப்பவர்கள் உடை மாற்ற அறை ஏற்படுத்தி தரவேண்டும்.
9.லட்சதீப விழா பற்றி பத்திரிக்கைகளிலும் டிவிகளிலும் இணையதளம் வாட்ச்அப்.பேஸ்புக் மூலமாகவும் விளம்பரம் செய்யவேண்டும்
10.பொதிகை மற்றும் தனியார் தொலைகாட்சிகளிலும் லட்சதீப விழாவினை நேரடியாக வர்ணனை செய்திட வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.
11. சிறு மழைக்கே தாழக்கோயிலில் உள்ள அம்மன் சிலைஅருகில் மழைநீர் வந்துவிடுகின்றது. அதற்கான உள்ள வடிகால் வசதியை தொல்பொருள் அலுவலர் மூலம் கண்டுபிடித்து சரிசெய்துவிட வேண்டும்.
12.தாழக்கோயில் உள்ள ஆமை மண்படத்தினை சுற்றி பூந்தோட்டம் அமைக்கலாம்.
உங்களுக்கான ஏதாவது ஆலோசனை ஏதும் இருப்பின் தெரிவிக்கவும். இந்த பகுதியில் வெளியிட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லாம்.
வாழ்க வளமுடன்
வேலன்.

கடந்த முறை நடைபெற்ற லட்சதீப திருவிழாவின் இரண்டாவது பாகத்தின் வீடியோ தொகுப்பு கீழே:-

வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-திருக்கழுக்குன்றம் லட்சதீப விழா...


திருக்கழுக்குன்றத்தில் நடைபெற உள்ள லட்ச தீப தகவல்களும்.திருக்கழுக்குன்றம் பற்றிய தகவல்களும் இந்த இணையதளத்தில் தொடர்ந்து வெளியிடபடும். இலட்ச தீபத்திற்காக நானே உருவாக்கிய டிசைன் கீழே கொடுத்துள்ளேன்.
இதற்கு முன்னர் 2004 ஆம் வருடம் 18.08.2004மற்றும் 19.08.2004 அன்று நடைபெற்ற  லட்சதீப விழாவிற்கான வீடியோவினை 26.05.2010 அன்றே யூடியூப்பில் வீடியோவாக பதிவேற்றம் செய்துவிட்டேன். அதன்   வீடியோ  தொகுப்பு கீழே:-
 
தொடர்ந்து லட்சதீப திருவிழா பற்றிய தகவல்களையும் திருக்கழுக்குன்றம் ஊர் பெருமையையும் தகவல்களாக வெளியிடுகின்றேன்.உங்கள் அன்பினையும் ஆதரவையும் வேண்டி...
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்