வேலன்:- 5 முக்கிய நிகழ்சிகள் ஒரே நாளில்.

திருக்கழுக்குன்றத்தில் வருகின்ற 02.08.2016 நடைபெற உள்ள திருவிழா 5 சுப நிகழ்ச்சிகளை கொண்டுவருகின்றது.



1. புஷ்கர மேளா:-

குரு ஒவ்வொரு வருடமும் ஒரு ராசி என்று 12 ராசிகளையும் சுற்றி வருகின்றார்.அதன்படி குரு பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு 02.08.2016 அன்று காலை 09.27 க்கு மாறுகின்றார்..  புண்ணிய நதிகள் நமது சங்கு தீர்த்த குளத்தில் அன்று சங்கமிப்பதாக ஐதீகம். அன்று குளத்தில் குளித்தால் பல புண்ணியநதிகளில் குளித்த பலன் நமக்கு கிடைக்கும். குறிப்பாக கன்னி ராசி காரர்களுக்கு அதிகபலன் கிடைக்கும்.

2. இலட்ச தீபம்:-

 திருக்கழுக்குன்றத்தில் உள்ள மலைக்கோயில்.தாழக்கோயில.ருத்ராங்கோயில்.தீர்த்தகிரிஸ்வரர் கோயில் உள்ள அனைத்தது கோயில்களிலும்.சங்கு தீர்த்த குளத்தின் படிகளிலும் லட்ச தீபம் ஏற்றப்படும்.

3. அம்மன் தேர் உற்சவம்:-

தாழக்கோயிலில் உள்ள திருபுரசுந்தரி அம்மனுக்கு 10 நாள் ஆடி உற்சவம் நடைபெறும். அதன் படி 02.08.2016 அன்று அதிகாலையில்
அ ம்மன் தேர் மாடவீதிகளில் உலா வர இருக்கின்றது.

4. ஆடி அமாவாசை:-

காலம் சென்ற முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைய ஆடி அம்மாவாசை அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் அதிக பலன்கள் கிடைக்கும். ஆடி அமாவாசையும் 02.08.2016 அன்று வருகின்றது.

5. ஆடி செவ்வாய் கிழமை 3 ம் வாரம்:-

செவ்வாய் .வெள்ளி.மற்றும் ஞாயிறுக்கிழமை 3 ஆம் வாரத்தில் அம்மனை வழிபடுவது விஷேஷம். அதன்படி வருகின்ற 02.08.2016 அன்று 3 வது வாரம் செவ்வாய் கிழமை வருகின்றது.

அனைவரும் வருக ..இறைவன் அருள் பெறுக.

வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக