வேலன்:-இலட்சதீப திருவிழா-திருக்கழுக்குன்றம்.

திருககழுக்குன்றத்தில் ;இதுவரையில் நடை பெற்ற  லட்ச தீப திருவிழா வின் கடந்த கால நினைவுகள்:-

1968 ம் வருடம்:-

சங்கு தீர்த்த குளத்தினை சுற்ற நிறைய தென்னைமரங்கள் இருந்தன. ஒவ்வொரு தென்னை மரத்திலும் இரண்டு இரண்டு டியூப் லைட்டுகள் கட்டியிருந்தார்கள். குளத்தினை சுறறி மாட்டுவண்டிகளில் மக்கள் வந்திருந்தார்கள்.

1980 ம் வருடம்:-

சங'கு தீர்தத குளத்தினை சுற்றியும் முக்கியமான  தெருக்களிலும் கொம்பினை நட்டு அதில் கம்பியை கட்டி அதில் விளக்குகளை தொங்க விட்டார்கள்.திரி மற்றும் எண்ணை .எண்ணை ஊற்றுவதற்கு டப்பா என ஏற்பாடுகள்  செய்திருந்தார்கள்.

1992 ம் வருடம்:-

நகர் முழுவதும் மின் அலங்காரம் செய்திருந்தார்கள்.குவியல் குவியலாக அகல்விளக்கினையும் பெரல்களில் எண்ணையையும் வைத்திருந்தார்கள். 

2004 ம் வருடம்:-
குரு பெயர்ச்சி இரவில் நடைபெற்றது. அதன்காரணமாக புஷ்கர மேளா இரவிலும் லட்சதீபம் ஏற்றும் நிகழ்ச்சி மறுநாளும் நடைபெற்றது. இரவில் சுவாமி அலங்காரம் மிகச்சிறப்பாக இருந்தது. விளக்குகளை குளத்தின் படிக்கட்டுக்களிலும். கோயிலிலும் மலைகளிலும் ஏற்றியிருந்தார்கள்.

2004 நடைபெற்ற லட்சதீப திருவிழாவின் நான்காம் பகுதி கீழே:-
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக